துன்பங்கள் நீங்கி செழிப்பான வழி பிறக்க வேண்டும்- உதயராசா

IMG 1765
IMG 1765

துன்பங்கள் நீங்கி செழிப்பான வாழ்வு வாழ வழிபிறக்க வேண்டும் என தீபத் திருநாளில் வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்த தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொடிய நோய் தாக்கத்தின் மத்தியில் அனைத்து இந்து மக்களாலும் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடும் ஒரு பண்டிகையே தீபத் திருநாள்.

இலங்கைத் தீவில் போரின் வடுக்களில் இருந்து மெல்ல மெல்ல தலை நிமிர்ந்து வந்த தமிழ் மக்களுக்கும், இந்து மக்களுக்கும் நோயின் தாக்கம் பாதிப்புக்களை தந்தமையை மறுக்க முடியாது. இந்த தீபத்திருநாளில கொடிய நோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பேணி இந்து மக்கள் கொண்டாடுகின்றனர். மக்கள் தங்கள் வாழ்வில் இருளைப் போக்கி தீப ஒளியைப் போற்றும் ஒரு நாளாக இதனை கருதுகிறார்கள்.

இந்த இனிய நாளில் மக்களின் துன்பங்கள் நீங்கி, செழிப்பான வாழ்வு வாழ வழி பிறக்க வேண்டும் எனவும், கொடிய தொற்று நோய் இந்த நாட்டில் இருந்து நீங்க வேண்டும் கூறி அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

நாட்டின் நிலமையை உணர்ந்து சுகாதார நடைமுறைகளுடன் இதனை அமைதியாக கொண்டாடி இறையருள் பெற்று வழமாக வாழ இறைவனை வேண்டுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்