வளி மாசடைவை குறைக்கும் யோசனைகளை முன்வைக்குமாறு அமைச்சர் ஆலோசனை!

Mahinda Amaraweera
Mahinda Amaraweera

நகர பகுதிகளில் நிலவும் வளி மாசடைவை குறைப்பதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு, தேசிய சுற்றாடல் சபைக்கு அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய சுற்றாடல் சபையின் 14ஆவது அமர்வில் பங்கேற்றபோதே அவர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இந்த யோசனைகளை விரைவாக முன்வைக்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் வளிமாசடைதல் ஓரளவு குறைவடையக்கூடும்.

இதன் ஒரு கட்டமாக அடுத்த வருடம் முதல் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளை, சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.