அடுத்த வருடத்துக்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாதீ்ட்டுக்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்றுடன் நிறைவடைந்தது.
இதனையடுத்து, இன்று மாலை 6 மணியளவில் இதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமானது.
பாதீட்டுக்கு ஆதரவாக பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், அலி சப்ரி ரஹீம், எம்.எஸ்.தௌபீக், இஷாக் ரஹ்மான், நஷீர் அஹமட் ஆகியோர் வாக்களித்திருந்தனர்.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி எதிராக வாக்களித்தது.