20ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடே என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஆளும் தரப்பில் ஒருவிதமாகவும் ஏனைய கட்சிகள் ஒருவிதமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான இந்த கருத்தை சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார் .
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை அனைவரது ஒத்துழைப்புடன் தான் நாம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இதற்கு நாடாளுமன்றில் அனைவரது ஒத்துழைப்பும் அவசியமெனவும் இது நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடு. இது ஒரு தரப்பை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் தான் கடந்த அரசாங்கத்தின்போது 19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தோம். ஒருவர் மாத்திரமே எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார் ஆனால், எமது எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பதில் சந்தேகம் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .