கற்பிட்டி பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் மஞ்சள் ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்றும் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர் .
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 800 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.