நேற்றைய தினம் நாட்டில் எவருக்கும் கோவிட் 19 தொற்று இல்லை; சுகாதார அமைச்சு

39

நேற்றைய தினம் நாட்டில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த ஒருவர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். இது வரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 926 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதுடன் 185 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.