ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுமந்திரன் கோரிக்கை !

viwn Sumathiwn
viwn Sumathiwn

அரசாங்கமானது எமது அரசியல் எதிர்ப்பினை அடக்குவதற்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றதுஎன தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.

அம்பாறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, எமது அரசியல் செயற்பாட்டிற்கு அரசு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருப்பதனால் வடக்கு- கிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்

இதேவேளை இவ்வாறான தடைகள், முட்டுக்கட்டைகளை நீக்குவதற்காகவே வட.கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிப்பதற்கு கோரப்பட்டுள்ளது. முழுமையாக ஹர்த்தாலை அனுஸ்டிப்பதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.

இதேவேளை கடந்த காலங்களில் 19 ஆவது சீர்த்திருத்த சட்டத்தில் குறைகள் இருந்ததை நாம் அறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கும் தயாராக இருந்தோம்.

ஆகையால்தான் புதிய சீர்திருத்த சட்டத்தை நாம் எதிர்க்கவுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.