தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழர் தாயக பகுதியில் இன்று தமிழ் தேசியகட்சி களின் ஒழுங்கு படுத்தலில் முழுக்காதவடைப்பு போராட்டம் இடம்பெற்ற நிலையில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் பொலிசாரால் பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைக்களை தொடர்பு கொண்ட பொலிசார் பாடசாலைக்கு சமூகமளித்த மற்றும்,சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்களை அதிபர்களிடம் பெற்றுக் கொண்டதுடன், பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கையையும் கேட்டறித்து கொண்டனர்.
ஆனாலும் பாடசாலைக்கு மாணவர்கள் பெரியளவில் சமூகமளிக்காத நிலையில் கணிசமான ஆசிரியர்கள் பாடசாலை சென்றிருந்தமை குறிப்பிடக்கது.
இதேவேளை, குறித்த ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் பொலிசார் இவ் விபரங்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.