தியாகி திலீபன் ஒரு கொலையாளி. அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
ஊடக பிரதானிகளுடன் பிரதமர் இன்று நடத்திய சந்திப்பின் போது, அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
தியாகி திலீபனிற்கு நினைவேந்தல் நடத்த வேண்டும் என ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே குரலில் உண்ணாவிரதம் மற்றும் கதவடைப்பின் மூலம் அரசுக்கு உறைக்கும் விதமான தெரிவித்துள்ளனர்.
இந்த கதவடைப்பு, உண்ணாவிரதம் குறித்து பிரதமரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியபோது, பிரதமர் பதிலளிக்கும்முன்னரே அமைச்சர் இந்த கருத்தினை
தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் பிரதமர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் , கெஹலிய ரம்புக்வெல, கைத்தொழில்அமைச்சர் விமல் வீரவின்ச போன்றவர்கள் அங்கிருந்த போதும், அவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .