ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கும், ரணிலுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பேசுவதானால் அதன் பொறுப்பை, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஏற்க வேண்டும். அத்தோடு தோல்வி ஏற்பட்டால், அதற்கான முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் நாம் கூறிய விடயங்களை ஒருபோதும் அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. பாரியளவில் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதும். பயங்கரவாதம் உருவாக்கியதற்கும் குறித்த இருவருமே காரணம். ஆகவே கட்டாயமாக இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.