மூன்று மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி!

image
image

மதுகம வலல்லாவிட பிரதேசத்தில் மூன்று மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வலல்லாவிட, மாகலன்தாவ பிரதேசத்தை சேர்ந்த சிசு ஒன்றுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வலல்லாவிட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அதுகோரால தெரிவித்துள்ளார்.

குறித்த சிசுவின் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சிசு மற்றும் தாய் சிகிச்சைக்காக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.