ஐ.தே.க – மஹிந்த இரகசிய ஒப்பந்தம்? : வஜிர அபேவர்தன!

vajira
vajira

ஐக்கிய தேசியக் கட்சிலிருந்து பிரிந்து சென்றவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சினருக்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் இரகசிய ஒப்பந்தம் இருப்பதாக கடந்த காலத்தில் சில தரப்பினர் குற்றஞ்சாட்டிவந்தனர்.

எனினும் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை பார்க்கும்போது உண்மையில் ஒப்பந்தம் செய்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் இதுகுறித்து அவதானம் செலுத்தவேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார் .