நாட்டில் மேலும் 383 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9000 ஆயிரத்தைத் தாண்டியது.
குறித்த கொத்தணியில் நேற்றைய தினம் மேலும் 383 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரம் 570 ஆக உயர்ந்துள்ளது.அதன்படி, திவூலபிட்டி – பேலியகொட கொத்தணியில் 9092 ஆக உயரும் என்று தொற்றுநோயில் பிரிவு தெரிவித் துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 765 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர்.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 429 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.