நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் 10 ஆயிரம் பேரில் 28 பேர் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும்பாலான உயிரிழப்புகள் முதுமை மற்றும் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டதன் காரணமாகவே ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்ததில் இருந்து 40 நாட்களுக்குள் சுமார் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் இடம்பெற்ற கொரோனா உயிரிழப்புகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.