ஈழத்தில் சைவத்தினை வளர்த்த பெரியாரான ஆறுமுகநாவலரின் 141 ஆவது நினைவு தினம் இன்று(07) வவுனியா நகரில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றது.
நகரசபையின் ஏற்பாட்டில் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்விருட்சத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபையின் உப தலைவர் குமாரசாமி, உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மற்றும் தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், என பலரும் கலந்து கொண்டு ஆறுமுகநாவலரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதன்போது தமிழருவி சிவகுமாரனால் நினைவு பேருரையும் ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.