அதிக மக்கள் தொகை உள்ள பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு!

coronavirus66 1594465073
coronavirus66 1594465073

பி.சி.ஆர் பரிசோதனைக்குள்ளாகப்பட்டவர்கள், அந்த அறிக்கை கிடைக்கும் வரையில், தங்களது இருப்பிடங்களிலேயே இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாணத்தில் சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா பரவல் நிலையில் அதிகரிப்பை அவதானிக்க முடிவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனை செய்துக் கொண்டவர்கள், அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரையில், வெவ்வேறு பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அந்தசங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபை எல்லைப்பகுதிகளில் தொடர்ந்தும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதில் வீழ்ச்சிப்போக்கை அவதானிக்க முடியவில்லை.

குறிப்பாகக் கடந்த சில நாட்களாகக் குறைந்தளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பொரளை மற்றும் கறுவாத்தோட்டப் பகுதிகளில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அதேநேரத்தில் மேல் மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இந்த நோய் பரவல் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

குறைந்த அளவு நிலப்பரப்பில் அதிக மக்கள் தொகை உள்ள கிராமங்கள் மற்றும் மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் இந்த நிலைமையில் அதிகரிப்பைக் காணமுடிகின்றது.

குறிப்பாக அக்குறணை, நுவரெலியா, ஹட்டன், அம்பகமுவ மற்றும் குருணாகலை மாநகர எல்லை பகுதிகளும் இந்த நிலைமையில் உள்ளன.

எனவே, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், அந்த அறிக்கை கிடைக்கும் வரையில், தங்களது இருப்பிடங்களிலேயே இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.