சமூக இடைவெளியை மீறிய 39 பேர் கைது!

02
02

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை காரணமாக இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1111 ஆக அதிகரித்துள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.