வெளிநாடுகளில் இருந்து மேலும் 884 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

திரும்பினர் 1
திரும்பினர் 1

வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த 884 இலங்கையர்கள் இன்று (12) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 495 பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்கள் தொழில், வியாபாரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலியா, ஜப்பான், கட்டார், டுபாய் மற்றும் அபுதாபி போன்ற நாடுகளுக்கு பயணமாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.