வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

kandavalai 23
kandavalai 23

சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் இணைந்து நடத்துகின்ற விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கான நுளம்பு வலைகள் உலர் உணவுப் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கண்டாவளை பிரதேச செயலாளர் திரு த.பிருந்தாகரன் ,தர்மபுரம் கிழக்கு கிராம அலுவலர் ,தர்மபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.