கேரள கஞ்சா கடத்திய நபர் கைது

kaithu

கந்தளாய்  காவல்துறை விசேட அதிரடிப் படைக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 1 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹொரவப்பொத்தானை-பத்தேவ  பிரதேசத்தில் கடத்திச் சென்று கொண்டிருந்த வேளையில் 37 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவரென்பதோடு இவர் கெப்பத்திகொல்லேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.