ஆலய மணியின் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் மரணம்

Image 1
Image 1

ஆலய மணியின் கயிறு கழுத்துப்பகுதியில் இறுகியதில் 7 வயது சிறுவனொருவன் பரிதாபகரமாக உயிரிழந்து சம்பவமொன்று நுவரெலியா டிக்கோயா டங்கல் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

டங்கல் தோட்ட மேற்பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முற்றத்தில் குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கையில் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நோர்வூட் தமிழ் பாடசாலை ஒன்றில் தரம் 2இல் பயிலும் விக்னேஸ்வரன் டிலுக்சன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவனின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இச்சிறுவன் ஆலயத்தின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி ஒரு சிறுமியும் கழுத்துப்பட்டி கழுத்தில் இறுகி மற்றொரு சிறுமியும் அண்மையில் உயிர் நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.