வவுனியா சாளம்பைக்குளம் பகுதி முழுமையாக முடக்கப்பட்டது

IMG 20201212 WA0000
IMG 20201212 WA0000

கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதி காவல்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும், மகளும் சாளம்பைக் குளத்தில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகளின் படி இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரது இருப்பிடமான வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.