வவுனியா ஓமந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இறம்பைக்குளம் பகுதியில் மர்மமான முறையில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் யானையின் சடலம் இருப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் ஓமந்தை காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தியிருந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சடலம் துர்நாற்றம் வீசுவதால் பல நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்