வியாபாரம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தொிவித்து சிலாபத்தில் ஆர்ப்பாட்டம்!

202006020825124248 Electricity staff demonstration SECVPF
202006020825124248 Electricity staff demonstration SECVPF

தற்காலிக நடமாடும் வர்த்தகர்களுக்கு வியாபாரம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலாபத்தில் இன்று (12) காலை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலாபத்திலுள்ள வர்த்தகர்கள் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

சிலாப நகர மண்டபம் முன்பாக நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தின் போது பேரணியொன்றும் இடம்பெற்றது.

வாிகட்டும் வர்த்தகர்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கும் இவ்வேளையில் தற்காலிக வியாபாாிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு நகர சபை அனுமதியளித்தமை அசாதாரணமான செயலாகும் என சிலாபம் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜான்ஸ் சமரநாயக்க தொிவித்துள்ளார்.

இதேவேளை சிலாபம் நகர சபைத் தலைவர் துஷான் அபேசேக்கர உட்பட நகர சபை உறுப்பினர்கள் சிலரும் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதோடு குறித்த அனுமதியை தற்போது இரத்து செய்துள்ளதாகவும் நகர சபைத் தலைவர் தொிவித்துள்ளார்.