ஈரோஸ் அமைப்பினுடைய ஸ்தாபக தலைவர் இரட்ணசபாபதி அவர்களின் 14ம் ஆண்டு நிகழ்வு நேற்று (12) கிளிநொச்சியில் இடம்பெற்றது
கிளிநொச்சியில் உள்ள வன்னி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வினை ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்புஏற்பாடு செய்திருந்தது
இந்த நிகழ்வில் புதுயுகம் படைப்போம் சமூக விடுதலை பெறுவோம் எனும் தலைப்பிலும் சிறப்பு உரையினை அமைப்பின் அரசியல் துறை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஜோன்சன் லீமா அவர்கள் ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வநாயகம் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அஞ்சலி உரை ஆற்றினார்கள்
தலைவர் இரட்ணசபாபதி அவர்களின் நினைவாக 20 வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கான உலர்உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் மதியம் 1:30மணியளவில் நினைவு நிகழ்வுகள் நிறைவுற்றன