பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் பாடசாலை மாணவர்கள்!

school 1
school 1

உரிய முறையில் மழை நீர் வடிந்தோட வழியில்லாததன் காரணத்தால் புத்தளம் – பாலாவி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருப்பதாக தொிவிக்கப்படுகிறது.

புத்தளம் – பாலாவி சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரையான வகுப்புக்கள் உள்ளதோடு இப்பாடசாலையில் 850 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

மழைநீர் வடிந்தோடாமையால் பல நாட்களுக்கு பாடசாலை வளாகத்திற்குள் நீர் தேங்கி நிற்பதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர் விசனம் தொிவிக்கின்றனர்.

கல்வி நடவடிக்கைகளைப் போன்றே விளையாட்டுத் துறை சம்பந்தமான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருப்பதாகவும் இதனை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலொன்றை உருவாக்கித் தருமாறும் மாணவர்களைப் போன்றே பெற்றோரும் உரிய கல்வி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.