கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

download 1 14
download 1 14

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று சனிக்கிழமை காலை 09 மணி தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு 1,2,10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு 3,4,7,8 மற்றும் 9 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.