யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றையதினம் 382 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் கோப்பாய், ஊர்காவல்துறை மற்றும் இணுவில் பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.