சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் பொறுப்பேற்க தயார்

vasutheva nanayakara
vasutheva nanayakara

சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியாக அரசியல் நடவடிக்கை முன்னெடுத்த செல்வது தனது விருப்பமாயினும் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும் எவ்வாறாயினும் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் தான் சபாநாயகராக இருக்க விருப்பமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மு ன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் மரியாதைக்குரிய பதவியை விரும்புகின்றமையினால் சபாநாயகர் பதவி மீது ஆர்வம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.