மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தல் அடுத்து அங்கு இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து அந்த பகுதி 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தபட்டுள்ளதாக அரசாங்க அதிபர் கே. கருனாகரன் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து காத்தான்குடி பிரதேசம் முற்றாக கடைகள் அரச தினைக்களங்கள் அனைத்தும் மூடப்பட்டு சன நடமாற்றம் இன்றி இருப்பதுடன் அந்த பகுதியில் இராணுவத்தினரும், காவல்துறையினரும் வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதுடன் காவல்துறையினர் வீதி ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.