கொலைகாரரைச் சந்தித்து கட்சியைப் பிளவுபடுத்துகிறார் – சுமந்திரன் மீது சிறிதரன் குற்றச்சாட்டு!

sri
sri

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கிளிநொச்சியில் தன்னைக் கொலைசெய்ய முயன்றவர்களையே சந்தித்து தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்துகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனது ஊடகத்தின் மூலம் குற்றஞ் சாட்டியுள்ளார்.

அண்மையில் கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பரமநாதன் குமாரசிங்கம் உட்பட்ட இளைஞர்கள் சிலரைச் சந்தித்திருந்தார். தன்னைத் தவிர தமிழரசுக் கட்சியின் எந்த தலைவர்களும் கிளிநொச்சிக்கு நுழையக் கூடாது என்ற கொள்கையைக் கொண்ட சிவஞானம் சிறிதரன் அவர்களை இச்சந்திப்பு அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வமாக இயங்கும் இணையத்தில், ‘கிளிநொச்சியில் தமிழரசைப் பிளவுபடுத்த முனையும் சுமந்திரன் எம்பி’ எனத் தலைப்பிட்டு சுமந்திரனுக்கு எதிரான செய்தியைப் பச்சிலைப்பள்ளிபட பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் அவர்கள் பதிவிட்டுள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் அவர்களே மேற்படி இணையத்தின் தலைமை நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.