ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ தெலவல பகுதியில் வைத்து நேற்று (25) பிற்பகல் 2.25 அளவில் குறித்த பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளர்.
கஸ்கிஸ்ஸ பகுதியில் வசிக்கும் 33 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 2 கிராம் 70 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் கைபற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.