எம்மால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இது- இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

Dayasiri jeya
Dayasiri jeya

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்தர கட்சிக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி அவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எம்மால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இது. அதனால் இதனையும் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்வது என்பதே தற்போது எமக்குள்ள சவால். இதற்காக நாம் அனைவரும் செயற்பட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.