யாழ் நகரில் உள்ள பிரபல சைவ உணவகத்திற்கு பூட்டு

vlcsnap 2021 01 06 13h25m34s502
vlcsnap 2021 01 06 13h25m34s502

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.

பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த வருடம் 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு வந்து சென்றதன் அடிப்படையில் இன்று காலையில் இருந்து உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

உணவகத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் 11 பேரும் சுகாதாரப் பிரிவினரால்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.