பேச்சுவார்த்தையில் இணக்கம் இல்லை – கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறதா இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

JEEVAN 720x380 1
JEEVAN 720x380 1

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வை அமைச்சரவை அனுமதியுடன் அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டால், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளத் தயாராக இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் தொழில் அமைச்சு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.