யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா!

download 1 6
download 1 6

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாத்தளையைச் சேர்ந்த குறித்த தொற்றுக்கு உள்ளான மாணவன் கடந்தவாரம் வீடு சென்று திரும்பியதாகவும் அங்கு அவர் மரணச் சடங்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அவருடைய தாயாருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாத்தளை சுகாதாரத் திணைக்களத்தினரால் யாழ்ப்பாணம் சுகாதாரத் திணைக்களத்தினருக்கு இன்று(07) வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக மாணவனுக்கு விசேடமாக இன்று பி.சி.ஆர் பரிசோதனை துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதன்போதே குறித்த மாணவனுக்கு கொரோனா உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த மாணவன் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியமர்ந்திருந்தாகவும் அவருடன் நெருங்கிப்பழகியவர்கள் மற்றும் தங்கியிருந்தவர்கள் என மேலும் ஆறு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைப்பந்தியில் உள்ள உணவகம் ஒன்றில் அவர்கள் உணவருந்தச் சென்றுள்ளனர். அவ் உணவகம் உடனடியாக மூடப்பட்டு அதனை நிர்வகிப்பவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.