மட்டக்களப்பில் இரு காவல்துறையினர் உட்பட 25 பேருக்கு கொரோனா: காத்தான்குடியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

3a03cc9149c98bd0648fa8864203f4ef XL
3a03cc9149c98bd0648fa8864203f4ef XL

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் இரு காவல்துறை உத்தியோகத்தர் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று இன்று வியாழக்கிழமை (07) காத்தான்குடி பகுதியில் கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுந்தமானமாக இன்று பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் ஏறாவூர் சுகாதார பிரிவில் இரு காவல்துறை உத்தியோகத்தர்ள் உட்பட 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 20 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார பிரிவில் ஒருவருக்கும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் ஒருவர் உட்பட 25 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 ஆக அதிகரித்துள்ளதுடன் காத்தான்குடியில் 146 ஆதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார முறைகளை பேணி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.