மட்டக்களப்பு மாவட்ட இணைப்புக்குழு தலைவராக வியாழேந்திரன்

viyalendran
viyalendran

நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன், முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், உள்ளிட்டோர் மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தல், அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகள், இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் விபரம் பின்வருமாறு:

  • எஸ்.வியாழேந்திரன் – மட்டக்களப்பு மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர்
  • அங்கஜன் இராமநாதன் – யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவர்
  • முத்து சிவலிங்கம் – நுவரெலியா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர்
  • காதர் மஸ்தா – மன்னார் மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர்
  • விஜயதாச ராஜபக்ஷ – கொழும்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுத் தலைவர்
  • திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே – கம்பஹா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவி.
  • பியெல் நிஷாந்தவும் – களுத்துறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர்
  • சரத் அமுனுகம – கண்டி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர்
  • லக்ஷ்மன் வசந்த பெரேரா – மாத்தளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் தலைவர்
  • சந்திம வீரக்கொடி – காலி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர்
  • நிரோஷன் பிரேமரத்ன – மாத்தறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர்
  • திருமதி ஸ்ரீயாணி விஜேவிக்ரம – அம்பாறை மாவட்ட இணைப்புக்குழு தலைவர்
  • வீரகுமார திசாநாயக்க – அனுராதபுர மாவட்ட இணைப்புக்குழு தலைவர்
  • தேனுக விதானகமகே – பதுளை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர்
  • சாரதி துஷ்மன்ன – கேகாலை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர்
  • துனேஷ் கங்கந்த – இரத்தினபுரி மாவட்ட இணைப்புக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.