அபராதம் செலுத்த முடியாதுள்ள கைதிகளை விடுவிக்க தீர்மானம்

கைதிகள்
கைதிகள்

நாடு முழுவதுமுள்ள சிறைகளில் அதிகரித்து வரும் நெரிசல் நிலை காரணமாக அபராதம் செலுத்த முடியாதுள்ள கைதிகளை விடுவிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படும் அனைத்துக் கைதிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுவர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை சோதனைகளின் முடிவுகள் தொற்றில்லை என உறுதியாகும் போது அக்கைதிகள் தமது சொந்த ஊர் திரும்புகையில் அந்த ஊரின் காவல்துறையினர் , பொதுச்சுகாதார அதிகாரிகள் ஆகியோருக்கு அறிவிக்கப்படும் என்றார்.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்று உறுதியாகும் கைதிகள் ஒரு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்படுவர் என்றார்.