மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு கோரிக்கை

india
india

இந்தியாவினால் பலவந்தமாக வழங்கப்பட்ட மாகாண சபைகள் முறைமையை ஒழிப்பதற்கு இந்தியா ஒத்துழைக்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், ஆவண​ம் கையளிக்கப்பட்டுள்ளது.

தேரர்கள், ஏனைய மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால், இந்த ஆவணம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண ​சபைகள் யாவும், செயலிழந்து வௌ்ளை யானைகளாக தற்போது உள்ளது என்றும் மாகாண சபைகள் முறைமையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டுக்கு, இந்திய பிரதமர் ஒத்திழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ள நிலையில் இவ்வாறான ஆவணமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.