அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டு பன்றிகள் 59 வயதுடைய பணிப்பெண்ணை தாக்கியதில் சம்பவ இத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஹூஸ்டன் நகரில் உள்ள அனாஹூவாக் என்ற இடத்தில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் உள்ளூர் அதிகாரிகள் கூண்டுகளை வைத்து காட்டு பன்றிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அனாஹூவாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலையை முடித்துவிட்டு கிறிஸ்டின் ரோலின்ஸ் நேற்று முன்தினம் மாலை வெளியே நின்று கொண்டிருந்த வேளையில் காட்டு பன்றிகள் கூட்டமாக வந்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.