ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அம்பாறையில் ஆற்றிய உரை தொடர்பாக காவற்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார்.
நேற்று காலை அம்பாறை, உஹனவில் உள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது தனது உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பினை வழங்குமாறும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.