வவுனியாவில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

gun shot
gun shot

வவுனியாவில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.


நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், 


வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற சண்டையின் போது அங்கு வந்த மனைவியின் சித்தப்பாவினால் குறித்த பெண்ணின் கணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதோடு கட்டையினாலும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக அக்கிராம மக்களினால் ஓமந்தை காவற்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த காவற்துறையிரால் குற்றவாளி கைது செய்துள்ளதுடன், குற்றத்திற்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர். 


சூட்டு காயத்திற்குள்ளானவர்  29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியாசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை காவற்துறையிரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.