சம்பள முரண்பாட்டிற்கு விரைவில் தீர்வு

mahinda samarasinghe
mahinda samarasinghe

அரச சேவையாளர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆணைக்குழு அமைக்கப்படும் என அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரச சேவையினை ஊழல் மோசடியற்ற வினைத்திறன் மிக்க சேவையாக மாற்றுவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சகல சேவைகளுக்காகவும் விதிமுறைகள் அறிமுகப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரச சேவையாளர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.