விபத்திற்குள்ளாகிய சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீன்பிடி படகு!

freepressjournal import 2017 10 boat capsize
freepressjournal import 2017 10 boat capsize

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தநிலையில் குறித்த படகில் இருந்த மீனவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நெடுந்தீவிற்கு அருகில் நேற்று இரவு குறித்த படகு விபத்திற்குள்ளாகியுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குறித்த படகை கடற்படையினர் சுற்றிவளைக்க முயற்சித்த வேளை ஆபத்தான முறையில் படகினை செலுத்தியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.