கொரோனா தொற்றில் இருந்து தயாசிறி ஜயசேகர குணமடைவு

ஜயசேகர
ஜயசேகர

கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 8 ஆம் திகதி கொரோனா தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (20) அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் கொரோனா தொற்றில் இருந்து சுகம்பெற மருந்தாக எந்த சிரப்பையும் உட்கொள்ளவில்லை என்றும் அறிவித்துள்ளார்.