காலமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாசவின் இறுதிக்கிரியை அரசாங்க அனுசரனையில் முன்னெடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தன மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீரவிற்கும் இன்றைய தினம் அந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.