காபந்து அரசாங்கத்தில் மறைமுக வரிகள் குறைக்கப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் நேரடி வரிகளும் குறைக்கப்படவுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல்ல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத சாதாரண வரிதிட்டத்தை செயற்படுத்த உள்ளதாகவும்அவர் கூறியுள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் அறவிடப்பட்டு வந்த அனைத்து வரி அறவீடுகளும் சலுகை திட்டத்திற்கமைய இன்று முதல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய வரி அறவீடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.