கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் விபத்துக்குள்ளாகியதில் வேனில் பயணித்த ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணத்தின் எல்ல வெல்லவாய பிரதான வீதியில் குறித்த வேன் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பகுதியிலிருந்து கல்முனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.