இரண்டு வாரத்தில் புதிய கட்சி- சிறீகாந்தா அறிவிப்பு

srikanda
srikanda

புதியதொரு அரசியல் இயக்கத்தை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாக , ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பு , தமிழரசுக் கட்சியின் எடுபிடியாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஐ.தே.க இன் கிளையாகவும் செயற்பட்டு வருகின்றமையினால் மீண்டும் ரெலோவுடன் இணைந்து கொள்வதென்பது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளை இணைந்ததாக தமிழினத்தின் அடிப்படை அரசியல் உரிமைகள் மற்றும் ஜனநாயக வேட்கையை நிலைநிறுத்துவதற்காக புதிய இயக்கத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.